Best Singapore Tuition for Tamil 


முகப்பு
ஏன் நாங்கள்?
எங்கள் சேவைகள்
புத்தகம்
ஆசிரியர்
இணையத்தில் தமிழ்
தொடர்புகொள்ள
பெட்டகம்
தொடர்புகள்

பயனுள்ள பழமொழிகள்

பழமொழிகள் பழங்காலம் தொட்டு வழக்கத்திலிருக்கும் பொன்மொழிகளாகும். தொன்று தொட்டு நம் முன்னோர்கள் தங்கள் அநுபவத்தால் உணர்ந்த உண்மைகளை, இந்தப் பழமொழிகளின் வாயிலாக, உலகத்தோர் உணரும் பொருட்டு சுருங்கக் கூறி விளங்க வைத்திருக்கிறார்கள். உங்களுக்காக சில சிறந்த பழமொழிகள் இங்கே:

  1. அன்பிருந்தால் ஆகாததும் இல்லை.
  2. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
  3. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
  4. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
  5. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்
  6. அடியாத மாடு படியாது
  7. அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்
  8. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
  9. ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை
  10. ஆடையில்லாதவன் அரை மனிதன்
  11. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
  12. ஆழம் அறியாமல் காலை இடாதே.
  13. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை
  14. ஆறிலும் சாவு நூறிலும் சாவு
  15. ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு
  16. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
  17. இக்கரைக்கு அக்கரை பச்சை
  18. இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை
  19. இரைக்கிற ஊற்றே சுரக்கும்
  20. இளங்கன்று பயமறியாது
  21. இளமையில் கல்.
  22. இளமையில் கல்வி சிலையில் எழுத்து.
  23. உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.
  24. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே
  25. உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்.
  26. உதட்டில் உறவு உள்ளத்தில் பகை
  27. உப்பிட்டவரை உள்ளளவும் நினை
  28. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
    ஊருடன் ஒட்டி வாழ்
  29. உயிர் காப்பான் தோழன்
  30. ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்
  31. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
  32. எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே
  33. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
  34. எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்
  35. எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்.
  36. எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
  37. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.
  38. எறும்பு ஊரக் கல்லும் தேயும்.
  39. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
  40. ஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா?
  41. ஓரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்
  42. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
  43. ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்
  44. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
  45. ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்

  46. கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
  47. கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்
  48. கல்விக்கு அழகு கசடர மொழிதல்.
  49. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
  50. கழுதைக்குத் தெரியுமா கற்பூற வாசனை?
  51. கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
  52. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
  53. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
  54. கிட்டாதாயின் வெட்டென மற
  55. குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப் பட வேண்டும்
  56. குரைக்கிற நாய் கடிக்காது
  57. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
  58. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
  59. குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்
  60. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
  61. கூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு
  62. கெடுவான் கேடு நினைப்பான்.
  63. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
  64. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
  65. கொட்டினாள் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சி
  66. கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகிவிடாது

  67. சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.
  68. சர்க்கரை என்று சொன்னால் தித்திக்குமா?
  69. சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு
  70. சித்திரமும் கைப்பழக்கம்
  71. சிறு துரும்பும் பல் குத்த உதவும்
  72. சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி
  73. சுடினும் செம்பொன் தன்னொலி கெடாது.
  74. செய்வன திருந்தச் செய். சோம்பித் திரியேல்.

  75. தந்தை தாய் பேண்.
  76. தருமம் தலை காக்கும்
  77. தனக்கு மிஞ்சித் தான் தருமம்
  78. தனி மரம் தோப்பாகாது
  79. தன் கையே தனக்குதவி
  80. தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
  81. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே
  82. தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை; தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
  83. தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு
  84. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்
  85. தானாடா விட்டாலும் சதையாடும்
  86. தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்
  87. துள்ளுகிற மாடு பொதி சுமக்காது
  88. தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.
  89. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
  90. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

  91. நண்டு கொழுத்தால் வளையில் தங்காது
  92. நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை
  93. நல்லவன் என்ற பெயரெடுக்க நாள் செல்லும்.
  94. நன்மை கடைப்பிடி. நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
  95. நாய் வாலை நிமிர்த்த முடியாது
  96. நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்
  97. நிறை குடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்.
  98. நுணலும் தன் வாயால் கெடும்
  99. நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக.
  100. நெருப்பில்லாமல் புகையாது
  101. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
  102. நோய்க்கு இடம் கொடேல்.

  103. பசி வந்திடப் பத்தும் பறந்து போம்
  104. பணம் பத்தும் செய்யும்
  105. பதறாத காரியம் சிதறாது.
  106. பந்திக்கு முந்து படைக்குப் பிந்து
  107. பருவத்தே பயிர் செய்
  108. பல துளி பெருவெள்ளம்.
  109. பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான்
  110. பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எல்லப்படும்.
  111. பழகப் பழகப் பாலும் புளிக்கும்
  112. பாம்பின் கால் பாம்பு அறியும்.
  113. பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்
  114. பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி
  115. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.
  116. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டாதே
  117. புத்திமான் பலசாலி ஆவான்.
  118. புயலுக்குப் பின்னே அமைதி
  119. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
  120. பெண் என்றால் பேயும் இரங்கும்
  121. பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.
  122. பேராசை பெரு நட்டம்.
  123. பொறுத்தார் பூமி ஆள்வார்.
  124. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து

  125. மடியில் கனமிருந்தால் வழியில் பயம்
  126. மத்தளத்திற்கு இரு புறமும் இடி
  127. மனம் உண்டானால் வழி உண்டு.
  128. மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்.
  129. மின்னுவது எல்லாம் பொன்னல்ல.
  130. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?
  131. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்
  132. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே

  133. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்
  134. யானைக்கும் அடி சறுக்கும்
  135. யானைகொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்
  136. யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே

  137. வரவு எட்டணா செலவு பத்தணா
  138. வருமுன் காப்பதறிவு
  139. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
  140. வாழு, வாழ விடு
  141. விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?
  142. விளையும் பயிர் முளையிலே தெரியும்.
  143. வீட்டில் எலி வெளியில் புலிவெட்டு ஒன்று துண்டிரண்டு
  144. வெறுங்கை முழம் போடுமா?
  145. வெளுத்ததெல்லாம் பாலல்ல
  146. வெள்ளம் வரும் முன் அணைகோல வேண்டும்.
  147. வேலியே பயிரை மேய்ந்தால் விளைவு என்ன?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 






Copyright 2006 © TamilCube, All rights reserved.